என் இனியவளே
உதிர்ந்து விடும் எனத்தெரிந்தும்
மலரைச் சுமக்க
செடி மறுப்பதில்லை
தேய்ந்து விடும் எனத்தெரிந்தும்
நிலவைச் சுமக்க
வானம் மறுப்பதில்லை
இறந்து விடும் எனத்தெரிந்தும்
உயிரைச் சுமக்க
உடல் மறுப்பதில்லை
மறைந்து விடும் எனத்தெரிந்தும்
பனித்துளியை சுமக்க
புல்வெளி மறுப்பதில்லை
மறைந்து விடுவாய் எனத்தெரிந்தும்
உன் நினைவுகளை
சுமக்க மறக்காத
என் மனதைப் போல