Saturday, October 1, 2011

ஒன்று சேர்த்துவிடு


என் இனியவளே
என்னை எனக்கு
மிகவும் பிடிக்கும்
ஏனெனில்
என்னை நீ
விரும்பியவள் ஆயிற்றே
அதானால்தான்
பூமியைக்
காற்று பிரிவதில்லை
சூரியனை
வெப்பம் பிரிவதில்லை
கண்களை
இமை பிரிவதில்லை
கடலை
அலைகள் பிரிவதில்லை
அதுபோல்
உலகில் எந்த
காதலர்களும் பிரியக்கூடாது
கடவுளே காதலர்களையும்
ஒன்று சேர்த்து விடு

தழுவ வேண்டும்


அன்பே
என் கண்கள்
உறக்கத்தை தழுவுகின்றன
என் உதடுகள்
புன்னகையைத் தழுவுகின்றன
என் நாசிகள்
காற்றைத் தழுவுகின்றன
என் உடல்
உடையை தழுவுகின்றன
அது போல்
என்னை நீ தழுவ வேண்டும்
இல்லையேல்
நான் மரணம் தழுவ வேண்டும்