Friday, August 5, 2011

வாடுகிறேன் நான்

அன்பே
நீர் இல்லையன்றால்
வாடுவது பூக்கள்
நதி இல்லையன்றால்
வாடுவது கடல்
காட்சி இல்லையன்றால்
வாடுவது கண்கள்
அது போல்
நீ இல்லையன்றால்
வாடுவது நான்

பிரியும் வரை

அன்பே
உன் நினைவில்
நான் இந்த உலகையே
மறந்த போதும் ..
உன்னை மட்டும் என்றும்
மறக்க மாட்டேன்
மண்ணுடன் நீரின் உறவு
ஈரம் காயும் வரை ....
வானுடன் நிலவின் உறவு
இரவு முடியும் வரை
கண்களுடன் உறக்கத்தின் உறவு
விழிப்பு வரும் வரை
அது போல் அன்பே
உன்னுடன் என் உறவு
என் உயிர் பிரியும் வரை

விட்டு விடுமோ

மல்லிகையை
மறைத்து வைத்தால் - அதன்
மணம் விட்டு விடுமோ ?
அது போல்
உன்னை
பிரித்து வைத்தால் - என்
காதல் விட்டுவிடுமா ?

என்னை கொன்றிடு

அன்பே
கண்களிருக்கும் வரைதான்
பார்க்க முடியும்
காற்று இருக்கும் வரைதான்
சுவாசிக்க முடியும்
உயிர் இருக்கும் வரைதான்
வாழ முடியும்
அதனால்தான் அன்பே
என் இதயம்
நிற்பதற்குள் வந்து
என்னுடன் இணைந்து விடு
இல்லையனில்
என்னைக் கொன்றிடு
ஏனெனில்
என் வாழ்வு உன்னோடுதான்