Monday, October 10, 2011

கொடுப்பாயா ?

எனக்கு சொந்தமானவளே
தவமாய் தவமிருந்தால் கடவுள்
வரம் கொடுப்பாராம் ...
அதுபோல்
நானும் உனக்காக
காதல் தவமிருக்கிறேன்
நீ எனக்கு
கல்யாண வரம் கொடுப்பாயா ?
இல்லை
கல்லறை வரம் கொடுப்பாயா ?

அணையா விளக்கு

என் இனியவளே
வானம் என்பது
பூமிக்கு தூரம்தான்
மெளனம் என்பது
வார்த்தைக்கு தூரம்தான்
பார்வை என்பது
குருடனுக்கு தூரம்தான்
அதுபோல் அன்பே
தூரத்தில் பார்க்கும் பொழுது
இருப்பதாகவும்
அருகில் வரும் பொழுது
மறைந்து விடும்
கானல் நீர் அல்ல
நம் காதல்
அது எப்போதும்
சுடர் விட்டெரியும்
அணையா விளக்கு

இணைவேன்

அன்பே
பிரிவு உறுதியானது
என்பது தெரிந்த பின்பும்
என் மனம்
உன்னையே நாடுகிறது.....
ஏனெனில்
என் அடிமனதில்
ஒரு நம்பிக்கை
நான் உன்னுடன்
இணைவேன் என்று

போகின்றாய்

அன்பே
நீ இல்லாமல் எனது வானம்
எப்போது அமவாசையாகவே
இருக்கின்றது
எப்போது நீ வந்து பெளர்ணமி
ஆக்கப் போகின்றாய்