Sunday, November 20, 2011

உன் நினைவு

அன்பே
பூவெல்லாம் உன் வாசம்
கண்களெல்லாம் உன் கனவு
காற்று அனைத்தும் உன் சுவாசம்
பாதையெல்லாம் உன் பாத சுவுடுகள்
ஓசைகளில் எல்லாம் உன் குரல்
அது போல்
என் நெஞ்சமெல்லாம் உன் நினைவு

போய்விடுவாயோ ?

அன்பே
நான்
வலியால் துடிக்கும் போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
வலி காணாமல் போய்விடுகிறது
பசியால் வாடும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
பசி காணாமல் போய்விடுகிறது
அதுபோல்
நான்
காதலார் தவிக்கும்போது
உனது பெயரை உச்சரிக்கிறேன்
அதனால்
நீயும் காணாமல் போய்விடுவாயோ ?

பிரிக்க நினைத்தானோ

அன்பே
கண்களிருந்தால் கனவுகள்
இருக்கும்
மனமிருந்தால் ஆசைகள் இருக்கும்
உதடுகள் இருந்தால்
வார்த்தைகள் இருக்கும்
அதுபோல்
இதயம் இருந்தால் அதில்
காதல் இருக்கும்
அதனால்தான்
நான் உன்னை காதலிக்கிறேன்
கடவுள் இருந்தால் அதில்
சதி இருக்கும்
அதனால்தான்
உன்னை என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தானோ....!

என் கல்லறை

அன்பே
நான் உன்னுடன்
இணையாமல்
இறந்து போனாலும்
அப்போது
என்னிடம் உள்ள
உன் நினைவுகள்
மட்டும் காத்திருக்கும்
என் கல்லறையில்