Tuesday, June 21, 2011

மனதின் மென்மை

அன்பே
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை

No comments:

Post a Comment