Wednesday, June 22, 2011

உன் பெயர்

அன்பே
பிஞ்சுப் பிள்ளை நெஞ்சில்
பால் வாசம்
மேகம் தூரத்தயாரானால்
மண் வாசம்
கடற்கரை காற்றிலெல்லாம்
காதல் வாசம்
என் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவெல்லாம் உன் வாசம்
உலகின் மிகப்பெரிய
கவிதை எது என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உலகின் மிகச்சிறிய
கவிதை தெரியும்
அது உன் பெயர்

No comments:

Post a Comment