அன்பே
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
பத்திரமாய் உள்ளன
ஆனால் என் உயிரே
நீ எங்கே
இதமான தென்றல் காற்று
தீண்டினால் - நீ
தீண்டிய ஞாபகம்
குயிலின் ஒசையைக்
கேட்கும் போதெல்லாம் - நீ
பேசிய ஞாபகம்
அழகான மலரைப்
பார்க்கும்பொழுதெல்லாம் - உந்தன்
முகம் ஞாபகம்
நிலவு இரவைப்
பிரியும் போது - நீ
என்னைப்பிரிந்த ஞாபகம்
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
ஞாபகமாய் இருக்க
நீ எங்கே அன்பே
No comments:
Post a Comment