Thursday, June 23, 2011

பறிகொடுத்து விடுவேனோ

அன்பே
வானம் நிலவை
பறிகொடுத்து விடுகிறது
அமாவாசைக்காக
கண்கள் உறக்கத்தை
பறிகொடுத்து விடுகிறது
விழிப்பிற்க்காக
நாசி காற்றை
பறிகொடுத்து விடுகிறது
சுவாசித்திற்க்காக
அதுபோல்
நானும் உன்னை
பறிகொடுத்து விடுவேனோ
என் தந்தையின் கண்டிப்புக்காக

No comments:

Post a Comment