Wednesday, October 19, 2011

அன்புக்காக

அன்பே
தேனுக்காக
பூவை வட்டமிடுவது
வண்டுகள்
அதுபோல்
அன்புக்காக
உன்னை வட்டமிடுவது
நான் !.........

Monday, October 10, 2011

கொடுப்பாயா ?

எனக்கு சொந்தமானவளே
தவமாய் தவமிருந்தால் கடவுள்
வரம் கொடுப்பாராம் ...
அதுபோல்
நானும் உனக்காக
காதல் தவமிருக்கிறேன்
நீ எனக்கு
கல்யாண வரம் கொடுப்பாயா ?
இல்லை
கல்லறை வரம் கொடுப்பாயா ?

அணையா விளக்கு

என் இனியவளே
வானம் என்பது
பூமிக்கு தூரம்தான்
மெளனம் என்பது
வார்த்தைக்கு தூரம்தான்
பார்வை என்பது
குருடனுக்கு தூரம்தான்
அதுபோல் அன்பே
தூரத்தில் பார்க்கும் பொழுது
இருப்பதாகவும்
அருகில் வரும் பொழுது
மறைந்து விடும்
கானல் நீர் அல்ல
நம் காதல்
அது எப்போதும்
சுடர் விட்டெரியும்
அணையா விளக்கு

இணைவேன்

அன்பே
பிரிவு உறுதியானது
என்பது தெரிந்த பின்பும்
என் மனம்
உன்னையே நாடுகிறது.....
ஏனெனில்
என் அடிமனதில்
ஒரு நம்பிக்கை
நான் உன்னுடன்
இணைவேன் என்று

போகின்றாய்

அன்பே
நீ இல்லாமல் எனது வானம்
எப்போது அமவாசையாகவே
இருக்கின்றது
எப்போது நீ வந்து பெளர்ணமி
ஆக்கப் போகின்றாய்

Wednesday, October 5, 2011

கொலுசுச்சத்தம்

தூரத்தில் ஓடும் ரெயிலின்
சத்தம்
சலசலக்கும் இலைகளின்
சரிகமபதநி சத்தம்
ராகத்தோடு கூவும்
குயிலின் சத்தம்
இவை யாவையும் மீறி
என்னை எழுப்பியது
என் வீட்டு ஜன்னல்
ஓரத்தில் கேட்ட உன்
கொலுசுச்சத்தம்

மூச்சு நிற்பதற்குள்

அன்பே
திருடிய இதயத்தை
திருப்பிக் கொடுத்துவிடு
உன் இதயம்
அல்லது
என் இதயம்
மூச்சு நிற்பதற்குள்

நிறுத்தி விடு

அன்பே
சிதறிய சில்லறைகளை
எடுக்க முடிவதில்லை
தவிக்கிறேன்
நிறுத்தி விடு
உன் சிரிப்பை

Tuesday, October 4, 2011

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நினைவு அறிந்த நாள் முதல்
நினைவிருக்கும் இன்று வரை
பெற்றெடுத்த மகிழ்ச்சியில்
தாய் கொண்டாட
வளர்த்த மகிழ்ச்சியில்
தந்தை கொண்டாட
நினைக்க நேரமில்லை
என்ற வேலைப்பளு காரணத்திலும்
நினைவோடு கொண்டாடுவது
பிறந்த நாள் மட்டுமே
அந்தவொரு இனிய பிறந்த நாளை
கொண்டாடும் என் நண்பனுக்கு ( நிவாஸ் )
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Saturday, October 1, 2011

ஒன்று சேர்த்துவிடு


என் இனியவளே
என்னை எனக்கு
மிகவும் பிடிக்கும்
ஏனெனில்
என்னை நீ
விரும்பியவள் ஆயிற்றே
அதானால்தான்
பூமியைக்
காற்று பிரிவதில்லை
சூரியனை
வெப்பம் பிரிவதில்லை
கண்களை
இமை பிரிவதில்லை
கடலை
அலைகள் பிரிவதில்லை
அதுபோல்
உலகில் எந்த
காதலர்களும் பிரியக்கூடாது
கடவுளே காதலர்களையும்
ஒன்று சேர்த்து விடு

தழுவ வேண்டும்


அன்பே
என் கண்கள்
உறக்கத்தை தழுவுகின்றன
என் உதடுகள்
புன்னகையைத் தழுவுகின்றன
என் நாசிகள்
காற்றைத் தழுவுகின்றன
என் உடல்
உடையை தழுவுகின்றன
அது போல்
என்னை நீ தழுவ வேண்டும்
இல்லையேல்
நான் மரணம் தழுவ வேண்டும்