Thursday, June 16, 2011

வாழத்துடிக்கிறேன்

உயிரே
மலர் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
மலரினும் மென்மையானவள்………….!
நிலவு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நிலவினும் ஒளிமயமானவள்……………!
நெருப்பு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நெருப்பினும் பிரகாசமானவள்…………!
தேன் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தேனினும் இனிமையானவள்……….!
கடவுள் ஆணானால்
அவர் - உன்னுடன்
வாழத்துடிப்பார்
ஏனெனில் - நீ
கடவுளினும் தூய்மையானவள்……….!
கடல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
கடலினும் பெரியவள்…….!
தென்றல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தென்றலினும் இதமானவள்………..!
அதனால்தான்
அன்பே
நானும் உன்னுடன்
வாழத்துடிக்கிறேன்
ஏனெனில் - நீ
எனக்கு உயிரானவள்…..!!!!!!!!

No comments:

Post a Comment