அன்பே
உன்னைப் பார்க்கவே - நான்
கண்கள் வாங்கினேன்
உன்னைச் சுவாசிக்கவே - நான்
நாசியை வாங்கினேன்
உன் குரலைக் கேட்கவே - நான்
செவிகள் வாங்கினேன்
உன் வழி நடக்கவே - நான்
கால்கள் வாங்கினேன்
உன் கரம் பற்றவே - நான்
கைகள் வாங்கினேன்
உன் நினைவுகளை சுமக்கவே - நான்
இதயம் வாங்கினேன்
உன்னுடன் இணையவே - நான்
உயிரை வாங்கினேன்
No comments:
Post a Comment