Thursday, June 23, 2011

பறிகொடுத்து விடுவேனோ

அன்பே
வானம் நிலவை
பறிகொடுத்து விடுகிறது
அமாவாசைக்காக
கண்கள் உறக்கத்தை
பறிகொடுத்து விடுகிறது
விழிப்பிற்க்காக
நாசி காற்றை
பறிகொடுத்து விடுகிறது
சுவாசித்திற்க்காக
அதுபோல்
நானும் உன்னை
பறிகொடுத்து விடுவேனோ
என் தந்தையின் கண்டிப்புக்காக

அழிந்திடாத காதல்

என் இனிய பிரியமானவளே
எழுதப்படாத கவிதை நீ
வரையப்படாத ஓவியம் நீ
பருகப்படாத நீர் நீ
உதிர்ந்திடாத புஷ்பம் நீ
சுவாசிக்காத காற்று நீ
அதுபோல்
என் இதயங்களில்
அழிந்திடாத காதல் நீ

நீ என்னை

அன்பே
உன் கண்ணில்
நான் என்
கனவுகளைப் புதைப்பேன்
உன் மார்பில் நான் என்
ஆசைகளைப் புதைப்பேன்
உன் வார்த்தைகளில்
நான் என்
மொழிகளைப் புதைப்பேன்
உன் மடியில்
நான் என் முகம் புதைப்பேன்
நீ என்னை
மண்ணில் புதைக்காமலிருந்தால்

ஆயுள் முழுவதும்

என் இனியவளே
நான் கண்ணிமைக்க
ஒரு நொடி போதும்
ஆனால் அன்பே
நான் உன்னுடன்
வாழ்ந்திட என்
ஆயுள் முழுவதும் வேண்டும்

நீ எங்கே

அன்பே
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
பத்திரமாய் உள்ளன
ஆனால் என் உயிரே
நீ எங்கே
இதமான தென்றல் காற்று
தீண்டினால் - நீ
தீண்டிய ஞாபகம்
குயிலின் ஒசையைக்
கேட்கும் போதெல்லாம் - நீ
பேசிய ஞாபகம்
அழகான மலரைப்
பார்க்கும்பொழுதெல்லாம் - உந்தன்
முகம் ஞாபகம்
நிலவு இரவைப்
பிரியும் போது - நீ
என்னைப்பிரிந்த ஞாபகம்
உந்தன் நினைவுகள்
மட்டும் என்னில்
ஞாபகமாய் இருக்க
நீ எங்கே அன்பே

உனக்காக

அன்பே
நான்
சிரிப்பதும் உனக்காக
அழுவதும் உனக்காக
வாழ்வதும் உனக்காக
சாவதும் உனக்காக
உனக்காக மட்டும்தான்

போராடுகிறேன்

அன்பே
வாழ்க்கை
ஒரு போர்க்களம்
அதில் நான்
உனக்காக
போராடிக் கொண்டிருக்கிறேன்

Wednesday, June 22, 2011

உன் பெயர்

அன்பே
பிஞ்சுப் பிள்ளை நெஞ்சில்
பால் வாசம்
மேகம் தூரத்தயாரானால்
மண் வாசம்
கடற்கரை காற்றிலெல்லாம்
காதல் வாசம்
என் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூவெல்லாம் உன் வாசம்
உலகின் மிகப்பெரிய
கவிதை எது என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உலகின் மிகச்சிறிய
கவிதை தெரியும்
அது உன் பெயர்

நீயிருந்தால்

அன்பே
வானம் கூட
தொட்டுவிடும் தூரம்தான்
கடல் கூட
அளந்துவிடும் ஆழம்தான்
ஆம், உண்மைதான்
என்னருகே நீயிருந்தால்

உன்னை மட்டுமே

அன்பே
நிலவு பிடிக்கவில்லை
உந்தன் நினைவு பிடித்திருக்கின்றது
மலர்கள் பிடிக்கவில்லை
உந்தன் மனம் பிடித்திருக்கின்றது
குயில் பிடிக்கவில்லை
உந்தன் பார்வை பிடித்திருக்கின்றது
வார்த்தைகள் பிடிக்கவில்லை
உந்தன் கவிதை மட்டுமே
பிடித்திருக்கின்றது
உலகம் பிடிக்கவில்லை
உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது

பாரம்தான்

அன்பே
பார்வை இல்லாவிடில்
கண்களுக்கு இமைகூட
பாரம்தான்
நிலவு இல்லவிடில்
வானுக்கு இரவுகூட
பாரம்தான்
நீர் இல்லாவிடில்
கடலுக்கு மீன்டகூட
பாரம்தான்
பசியில்லை என்றால்
வயிற்றுக்கு உணவுகூட
பாரம்தான்
நீ இல்லாவிடில்
என் உடம்புக்கு
உயிர் கூட பாரம்தான்

வயப்படத்தோன்றும்

அன்பே
உன் கண்களை
பார்க்கும் எவர்க்கும்
காதல்
வயப்படத்தோன்றும்

மணியோசை

அன்பே
என் காதுகளில்
ஓயாமல் ஒலிக்கிறது
உன் அழைப்புடன் அலறும்
தொலைபேசியின் மணியோசை

நினைத்தபோது

அன்பே
என் தந்தையின் கண்டிப்பும்
என் அன்னையின் அரவணைப்பும்
மறந்து போனது
உன்னை நினைத்த போது

நிச்சயம்

அன்பே
மின்னல் தாக்கினால்
மரணம் நிச்சயம்
அதுபோல்
உன் கண்கள் தாக்கினால்
காதல் நிச்சயம்

சொல்கின்றனவே

அன்பே
உதடுகள் மட்டும்தான்
கவிதை சொல்லுமா?
உன் கண்கள் கூட
கவிதை சொல்கின்றனவே

உன்னை சுவாசிக்கிறேன்

அன்பே
நான் காற்றை
சுவாசிக்கவில்லை
உன்னை சுவாசிக்கிறேன்

நீயே

அன்பே
உன் நினைவுகளே
என் சந்தோசம்
நீயே என் வாழ்க்கை
உன் குரலே என் சங்கீதம்

மலர்கள் கூட

அன்பே
காதலில் மட்டும்தான்
மலர்கள் கூட
ஆயுதாமாகின்றன

வாழ்வதென்றால்

அன்பே
நான் நரகத்தில் கூட
சந்தோசமாய் வாழ்வேன்
உன்னுடன் வாழ்வதென்றால்

நீ பிரிந்தால்

அன்பே
வானத்தை நிலவு பிரிந்தால்
அமாவாசை
வானத்தை சூரியன் பிரிந்தால்
இரவு
உடலில் உயிர் பிரிந்தால்
மரணம்
அதுபோல்
என்னை நீ பிரிந்தால்
நான் பிணம்

தூண்டியது

அன்பே
பிரிவில்தான்
நேசம் வளருமாம்
உண்மைதான்
உன்மேல் எனக்கு
அதிக நேசத்தை
தூண்டியது

Tuesday, June 21, 2011

கண்ணீர் கூட

என்னவளே
நான் உனக்காக
சிந்தும்
கண்ணீர் கூட
பன்னீர் தான்............!

தெரியவில்லை

அன்பே
உன்னை நினைத்து
துடிக்கும் என்
இதயத்திற்க்கு
உன் நினைவுகளை
விலக்க தெரியவில்லை

தெரியவில்லை

அன்பே
உன்னை நினைத்து
துடிக்கும் என்
இதயத்திற்க்கு
உன் நினைவுகளை
விலக்க தெரியவில்லை

மிகப் பெரியது

அன்பே
என் இதயம்
மிகச் சிறியாதாய்
இருக்கலாம்
ஆனால் - அதில்
உள்ள உன் நினைவுகள்
மிகப் பெரியது

கொடியது

அன்பே
மரணத்தை விட
மிகவும் கொடியது
உன் பிரிவு

எனக்கு மட்டுமே

அன்பே
நீ மணமாக இருந்திருந்தால்
மலருக்குச் சொந்தம்
நீ நிலவாயிருந்தால்
வானத்துக்கு சொந்தம்
ஆனால் - நீ
பெண்ணாயிருப்பதால்
எனக்கு மட்டுமே சொந்தம்

மனதின் மென்மை

அன்பே
வண்டாய் இருந்திருந்தால்
தெரிந்திருக்காது
மெல்லிய மலராய்
உன் மனதின் மென்மை
தேவை அப்போது
தேன் மட்டுமாய் இருந்திருக்கும்
இதழ் மேல் படிந்த
காலைப் பனித்துளியாய்
உன்னில் நான்
சில காலமே இருந்து
கால் வெயிலாய் பிரிந்தாலும்
எனக்கு தெரியுமடி
உம் மனதின் மென்மை

சொல்லாத கவிதைகளா?


அன்பே
இங்கும் , பேப்பரும்
இலவசமாக கிடைத்திருந்தால்
உன்னை வர்ணித்து
கோடி கவிதையெழுதி
குவித்திருப்பேன்
ஆனாலும் அன்பே
உன் கண்கள்
சொல்லாத கவிதைளையா
நான் காகிதத்தில்
சொல்லி விடப்போகிறேன்

உன் இதயம்

அன்பே
நீ காதலுக்கே
காதலிக்க
கற்றுக்கொடுத்தவள்
மின்சாரத்தின் முகவரி
உன் கண்கள்
அருவியின் முகவரி
உன் சிரிப்பு
பூக்களின் முகவரி
உன் இதழ்கள்
சாந்தத்தின் முகவரி
உன் முகம்
என் முகவரி
உன் இதயம்

Thursday, June 16, 2011

இதயத்திருடி

அன்பே
உன்னை திருடி
என்று சொல்கிறேன்
ஏனென்றால் - நீ தான்
என் இதயத்தை
திருடியவளாயிற்றே

நீதானே

அன்பே
என் காதல் பள்ளி
நீ தான்
ஏனெனில்
என்க்கு - காதல் பாடம்
கற்றுக் கொடுத்தது நீ தானே

நினைவுகள்

அன்பே
ஏன் என்னை
கொல்லாமல் கொல்கிறாய்
தூக்கத்திலும்
தூங்காமல் கொடுமைப்படுத்துகிறது
உன் இனிய
அன்பான நினைவுகள்

நீ

அன்பே
என் கனவிலும் நீ
என் நினைவிலும் நீ
என் உயிரிலும் நீ
என் இதயத்திலும் நீ
மொத்ததில்
என்னில் நீ

யார் சொன்னது ?

அன்பே
மெளனத்திற்கு
மொழியில்லையாம்
யார் சொன்னது ?
உன் மெளனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்றுத்தந்தது

உன்னைப்பார்த்த பிறகு

அன்பே
என் கண்கள் கூட
புன்னகைக்க
கற்றுக்கொண்டது
உன்னைப்பார்த்த பின்புதான்

தோல்வியில்லை

அன்பே
காற்றுக்கு வேலியில்லை
வானுக்கு எல்லையில்லை
அலைக்கு ஒய்வில்லை
ஆசைக்கு வயதில்லை
அதன் பிறகு தடையில்லை
அதுபோல் நம்
காதலுக்கு தோல்வியில்லை

உன்னுடன்

அன்பே
இந்த உலகமே
அற்பமாய்த் தோன்றியது
உன்னுடன் வாழ்ந்தபோது……!

நானில்லை

அன்பே
நிலவின்றி வானில்லை
நீரின்றி மீனில்லை
கடலின்று அலையில்லை
வார்த்தையின்றி கவிதையில்லை
கண்களின்றி பார்வையில்லை
இதயமின்றி துடிப்பில்லை
காற்றின்றி சுவாசமில்லை
அது போல் அன்பே
நீயின்றி நானில்லை

வாங்கினேன்

அன்பே
உன்னைப் பார்க்கவே - நான்
கண்கள் வாங்கினேன்
உன்னைச் சுவாசிக்கவே - நான்
நாசியை வாங்கினேன்
உன் குரலைக் கேட்கவே - நான்
செவிகள் வாங்கினேன்
உன் வழி நடக்கவே - நான்
கால்கள் வாங்கினேன்
உன் கரம் பற்றவே - நான்
கைகள் வாங்கினேன்
உன் நினைவுகளை சுமக்கவே - நான்
இதயம் வாங்கினேன்
உன்னுடன் இணையவே - நான்
உயிரை வாங்கினேன்

இருக்கும் வரை

அன்பே
காதல் புனிதமானதுதான்
உண்மைக் காதலர்கள்
இருக்கும் வரை
நானும் புனிதமானவன் தான்
உன் நினைவு
என்னுள் இருக்கும் வரை………..!

வாழத்துடிக்கிறேன்

உயிரே
மலர் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
மலரினும் மென்மையானவள்………….!
நிலவு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நிலவினும் ஒளிமயமானவள்……………!
நெருப்பு ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
நெருப்பினும் பிரகாசமானவள்…………!
தேன் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தேனினும் இனிமையானவள்……….!
கடவுள் ஆணானால்
அவர் - உன்னுடன்
வாழத்துடிப்பார்
ஏனெனில் - நீ
கடவுளினும் தூய்மையானவள்……….!
கடல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
கடலினும் பெரியவள்…….!
தென்றல் ஆணானால்
அது - உன்னுடன்
வாழத்துடிக்கும்
ஏனெனில் - நீ
தென்றலினும் இதமானவள்………..!
அதனால்தான்
அன்பே
நானும் உன்னுடன்
வாழத்துடிக்கிறேன்
ஏனெனில் - நீ
எனக்கு உயிரானவள்…..!!!!!!!!

மாற்றமில்லை

அன்பே
உன் வெற்றுப்பார்வை - என்னில்
ஆயிரம் ஆயிரம்
கவிதைகளை தோற்றுவிக்கின்றன.
ஆனால்
என் காதல் பார்வை - உன்னில்
எவ்வித மாற்றத்தையும்
ஏற்படுத்தாதது ஏனோ?

என் துணை

அன்பே
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும் நிழலாய்
இரு
என்று சொல்ல
விரும்பவில்லை
ஏனெனில்
இருளில் நிழலின் நிலை என்ன?
அதானால்
நீ எப்போதும்
என்னுடன் இருக்கும்
என் துணையாய் இரு….!

விரும்புகிறேன்

அன்பே
நான் சிப்பிக்குள்
முத்தாய்
இருப்பதை விட
உன்னுள் உயிராய்
இருக்க விரும்புகிறேன்

என் ராணி

அன்பே
உனக்காக தாஜ்மஹால்
கட்ட ஆசைதான்
ஆனால் நான்
பணக்காரன் இல்லை
எனவே , உனக்காக்
என் இதயத்தில்
காதல் கோட்டை கட்டியுள்ளேன்
அதில் உன் முகம் பார்க்கிறேன்
என் காதல் கோட்டைக்கு
மட்டுமில்லை
எனக்கும் ராணி நீ தான்

காதல் கவிதை

உயிரே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
என் சுவாசக் காற்றே
என் இதயத்தில் உன்க்கு
கோவில் கட்டினேன்
ஆனால்
நீ என்னை
கண்களால் கைது செய்தாய்
ஆனந்த பூங்காற்றே
என் நேசம் முழவதும் உனக்கு
புன்னகை பூவே
உன்னை நினைத்து
என்னை மறந்தேன்
என் முகவரி உன் இதயம்
பூவே உனக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்
ஏனென்றால் என்
காதல் கவிதை நீயென்பாதால்

மறுக்கிறாய்



அன்பே
உன் மின்னல் பார்வை - என்னை
மின்சாரமாய் தாக்குதடி
உன் இனிய குரல் - என்னை
இசையாய் ஒலிக்குதடி
உன் கொழுசின் ஒசை - என்னை
கொல்லாமல் கொல்லுதடி
உன் ஒவ்வொரு அசைவும் - என்னில்
காதலைத் தூண்டுதடி
இதயத்தை திருடிக்கொண்டு
இதழ் திறக்க மறுக்கிறாய்

எனக்கு தெரியாது

அன்பே
நீ புன்னகை வீசினாலும்
காதலிப்பேன்
நீ நெஞ்சைப் புண்ணாக்கினாலும்
காதலிப்பேன்
நான் உன்னால் இறந்து போனாலும்
காதலிப்பேன்
உயிரோடு என்னை எரித்தாலும்
காதலிப்பேன்
ஆனால் எதற்க்கு?
அது அதுதான் எனக்கு தெரியாது

காதல் வாழ்க

உயிரே
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
சந்தித்த நாளில்
மனதை பறிகொடுத்து
என்னில் நீயாய்
உன்னில் நானாய்
வாழச் செய்த
"காதல் வாழ்க"

ரசித்தவன்



அன்பே
நீ பிரம்மன்
எழுதிய கவிதையானாலும்
ரசித்தவன்
நான் மட்டும்தான்...!